பாதாள லிங்கேஸ்வரர் சிலை திருட்டு
கலசபாக்கம் அருகே பாதாள லிங்கேஸ்வரர் சிலை திருடப்பட்டுள்ளது.
கலசபாக்கம்,
கலசபாக்கம் ஒன்றியம் சீட்டம்பட்டு கிராமத்தில் மிகப் பழமை வாய்ந்த பாதாள லிங்கேஸ்வரர் சாமி சிலை உள்ளது. இதனை அப்பகுதி மக்கள் வழிபாடு செய்து வருகின்றனர். இந்த சிலைக்கு கோவில் எதுவும் இல்லை. திறந்த நிலையில் உரிய பாதுகாப்பும் இல்லாமல் இருந்து வருகின்றது. இந்த நிலையில் சிவலிங்கத்தின் மேல் பகுதியை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர். தகவல் அறிந்த போலீசார் நேரில் சென்று விசாரணை செய்து வருகின்றனர்.