ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது

ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்த வாலிபரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். அவருக்கு உடந்தையாக இருந்த தாய்மாமாவும் சிக்கினார்.

Update: 2020-03-19 23:30 GMT
சென்னிமலை,

கரூர் மாவட்டம் மண்மங்கலம் காளியம்மன் கோவில் வீதியை சேர்ந்த ராமர் என்பவரின் மகன் சுகுமார் (வயது 21). கூலித்தொழிலாளி. இவருடைய தாய் மாமா மணிகண்டன் (வயது 29) என்பவர் ஈரோடு மாவட்டம் சென்னிமலை பகுதியில் வசித்து வருகிறார்.

சுகுமார் அடிக்கடி சென்னிமலை பகுதியில் உள்ள மணிகண்டன் வீட்டுக்கு சென்று வருவது வழக்கம். அப்போது அவருக்கும், அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கும் பழக்கம் ஏற்பட்டது.

கைது

இந்த நிலையில் ஆசை வார்த்தை கூறி சிறுமியை கடந்த 15-ந் தேதி பழனிக்கு அழைத்து சென்று சுகுமார் திருமணம் செய்ததாக கூறப்படுகிறது.

இதற்கிடையே தங்களுடைய மகளை காணவில்லை என அந்த சிறுமியின் பெற்றோர், சென்னிமலை போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆசை வார்த்தை கூறி சிறுமியை திருமணம் செய்ததாக சுகுமாரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மேலும் சுகுமாருக்கு உடந்தையாக இருந்ததாக அவருடைய தாய் மாமா மணிகண்டனையும் போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்