ஏரியில் மூழ்கி வடமாநிலத்தை சேர்ந்தவர் சாவு

ஏரியில் மூழ்கி வடமாநிலத்தை சேர்ந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-03-26 22:15 GMT
ஸ்ரீபெரும்புதூர், 

மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர் ரைவோ(வயது 56). இவர் காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த பிள்ளைப்பாக்கம் கிராமத்தில் தங்கி இருங்காட்டு கோட்டை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். 

இந்த நிலையில் ரைவோ பிள்ளைப்பாக்கம் ஏரியில் குளிக்க சென்றார். அப்போது ஆழமான பகுதியில் தண்ணிரில் சிக்கி மூழ்கினார். குளிக்க சென்ற ரைவோ நீண்ட நேரமாக வராததையடுத்து அக்கம்பக்கத்தினர் ஏரியில் இறங்கி தேடினர். ரைவோவின் உடல் மீட்கப்பட்டது.

இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

மேலும் செய்திகள்