கொரோனா நிவாரண உதவிக்கு கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் - அதிகாரி தகவல்

கொரோனா நிவாரண உதவிக்கு கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் ராஜசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

Update: 2020-04-08 05:50 GMT
கடலூர்,

கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில் கட்டுமானம் மற்றும் ஓட்டுநர் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு பெற்ற தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் ரூ.1,000 நிவாரண உதவித்தொகை வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டபேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

எனவே கடலூர் தொழிலாளர் உதவி ஆணையர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) அலுவலகத்தில் பதிவு பெற்றுள்ள கட்டுமானம் மற்றும் ஆட்டோ ஓட்டும் தொழிலாளர்கள் கொரோனா நிவாரண உதவி தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

அதற்காக cudlosss@ gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தொழிலாளர்கள் தங்களது அடையாள அட்டை, வங்கி கணக்கு புத்தகம், குடும்ப அட்டை மற்றும் ஆதார் அடையாளர் அட்டை நகல்களை அனுப்பி வைக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்