இன்று முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு கலெக்டர் சாந்தா உத்தரவு

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு என மாவட்ட கலெக்டர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-05-01 06:09 GMT
பெரம்பலூர், 

இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு என மாவட்ட கலெக்டர் சாந்தா உத்தரவிட்டுள்ளார்.

முழு ஊரடங்கு

பெரம்பலூர் மாவட்டம், லெப்பைக்குடிகாட்டை சேர்ந்த கர்ப்பிணிக்கும், துங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரியும் அத்தியூரை சேர்ந்த ஒருவருக்கும் நேற்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் லெப்பைக்குடிகாடு பேரூராட்சி மற்றும் அத்தியூர், துங்கபுரம் ஆகிய ஊராட்சிகளில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வருகிற 3-ந் தேதி வரை ஆகிய மூன்று நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படவுள்ளது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவ சேவைகளுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும். மேலும் 14 நாட்களுக்கு வெளி நபர்கள் மேற்காணும் பகுதிகளுக்குள் செல்லவும், உள்ளூர் நபர்கள் வெளியில் செல்லவும் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் முழு ஊரடங்கு காலத்தில் பாதுகாப்பாக வீட்டில் இருந்து தங்களை காத்து கொள்ள வேண்டும்.

இந்த தகவலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்