ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்

ஊரடங்கால் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிவார ணம் வழங்கப்பட்டது.

Update: 2020-05-02 21:50 GMT
கடலூர்,

பா.ஜனதா கட்சியின் மாநில தலைவர் எல்.முருகன், பெருங் கோட்ட பொறுப்பாளர் கருப்பு முருகானந்தம் ஆகியோரது ஆணைக்கிணங்க சிதம்பரம் கோட்ட பொறுப் பாளர் சுகுமாரன் அறிவு றுத்தலின்படி, கடலூர் கிழக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, ஊரடங்கில் பாதிக்கப்பட்ட தொழிலா ளர்கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரண பொருட் கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதற்கு மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். சமூக ஊடக பிரிவு மாவட்ட தலைவர் ஜெனித் மேகநாதன், தேர்தல் நிர்வாகி கஞ்சமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட அமைப்பாளர் விஜயரங்கம், மாவட்ட பொது செயலாளர் கோவிந்தராஜ், மாநில இளைஞர் அணி பொருளாளர் கோபிநாத் கணேசன், மாவட்ட துணைத்தலைவர் குணசேகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கடலூர் நகராட்சியில் 30 முதல் 33-வது வார்டு வரைக்கும் பணிபுரியும் துப்புரவு பணியாளர்கள், தொழிலாளர் கள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு அரிசி, காய்கறிகள், பருப்பு, மஞ்சள், சோப்பு, முககவசம் ஆகியன அடங்கிய தொகுப் பை வழங்கினர்.

இதில், நகர தலைவர் வேலு வெங்கடேசன், கலை பண்பாட்டு தலைவர் வெங்கடேசன், பரதன், தென்றல் திருக்குமார், பழனிவேல், சிவகணேஷ், அருள், விசுவநாதன், தமிழ்ச் செல்வன் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் கிளைத் தலைவர் பி.வேலு நன்றி கூறினார்.

கூத்தப்பாக்கம்

கூத்தப்பாக்கத்தில் அ.ம.மு.க. சார்பில் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு மாநில வக்கீல் பிரிவு துணை செயலாளர் சத்தியராஜ் தலைமை தாங்கி, ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கினார். நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் சிவக்குமார், மாவட்ட வக்கீல் அணி சுகன்யா, மாவட்ட மாணவரணி துணை தலைவர் அரவிந்த், வக்கீல் அணி மாவட்ட செயலாளர் பாலாஜி, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தேவகுமார், நிர்வாகிகள் பிரகாஷ், இளங்கோவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்