ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைப்பு
ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைப்பு.
ஜோலார்பேட்டை,
ஏலகிரி மலையில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. கடந்தசில நாட்களாக ஏலகிரி மலையில் உள்ள செடி, கொடிகள், மரங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்து வருகின்றனர். ஏற்கனவே 3 முறை தீ வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் இரவு 7 மணியளவில் மண்டலவாடி அருகே உள்ள ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைத்தனர். அந்தத் தீ சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியது. ஏலகிரி மலைக்கு தீ வைக்கும் மர்மநபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஏலகிரி மலையில் ஏராளமான வன விலங்குகள் உள்ளன. கடந்தசில நாட்களாக ஏலகிரி மலையில் உள்ள செடி, கொடிகள், மரங்களுக்கு மர்மநபர்கள் தீ வைத்து வருகின்றனர். ஏற்கனவே 3 முறை தீ வைத்துள்ளனர். அதைத்தொடர்ந்து நேற்று மீண்டும் இரவு 7 மணியளவில் மண்டலவாடி அருகே உள்ள ஏலகிரி மலையில் மர்மநபர்கள் தீ வைத்தனர். அந்தத் தீ சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்துக்கு பரவியது. ஏலகிரி மலைக்கு தீ வைக்கும் மர்மநபர்களை பிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.