கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 26 பேர் கைது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடியதாக 26 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-05-10 23:50 GMT
மத்திகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்திகிரி போலீசார் தின்னூர் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய மத்திகிரியை சேர்ந்த வினய்குமார் (வயது 42), சிப்காட் ஆனந்த நகர் திருநாவுக்கரசு (40), ஆனந்தகுமார் (23), சுரேஷ் (30), வினோத் (39), மாதேஷ் (30), ரமேஷ் (27), முஜிபல் பாஷா (39), சதீஷ்குமார் (32), சீனிவாசன் (37), சங்கர் (37), ஸ்டீபன்ராஜ் (23) ஆகிய 12 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

கெலமங்கலம், தளி

கெலமங்கலம் போலீசார் போடிச்சிபள்ளி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அந்த பகுதியை சேர்ந்த ரமேஷ் (46), சுரேஷ் (35), ரகு (25) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். இதேபோல் தளி போலீசார் அகலகோட்டை பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடியதாக அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் (54), ஈரப்பா (30), கணேஷ் (27), சின்னராஜ் (21), காந்தி (22), திம்மராஜ் (21), சசிக்குமார் (25) ஆகிய 7 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

தளி போலீசார் தாசரப்பள்ளி ஏரி பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அதே பகுதியை சேர்ந்த காணிக்கைசாமி (32), அந்தோணிராஜ் (21), லெபாட்டிரிக் (28), அலெக்ஸ் (30) ஆகிய 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்