அந்தியூர் தனிமை முகாமில் கலெக்டர் ஆய்வு

அந்தியூர் தனிமை முகாமில் கலெக்டர் சி.கதிரவன் ஆய்வு செய்தார்.

Update: 2020-05-11 23:15 GMT
அந்தியூர்,

வெளிமாநிலத்தில் இருந்து அந்தியூர் பகுதிக்கு வந்த 15 பேர் அந்தியூர் செல்லம்பாளையம் மாதிரி பள்ளி வளாகத்தில் உள்ள முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு வைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் மாவட்ட கலெக்டர் சி.கதிரவன், செல்லம்பாளையத்தில் உள்ள தனிமை முகாமுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது தங்கும் வசதி, உணவு மற்றும் குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் குறித்து கேட்டு அறிந்தார். அப்போது அங்குள்ளவர்களிடம் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வரும் வரை தனிமை முகாமில் தங்கி இருக்க வேண்டும் என கலெக்டர் சி.கதிரவன் கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது அந்தியூர் தாசில்தார் மாலதி, மண்டல துணை தாசில்தார் சரவணன், அந்தியூர் வட்ட வழங்கல் அதிகாரி அழகேசன், சின்னத்தம்பிபாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சக்தி கிருஷ்ணன், எண்ணமங்கலம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அதிகாரி டாக்டர் சரவண பிரபு ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்