தாம்பரத்தில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு

தாம்பரத்தில் ஒரே குடும்பத்தில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.

Update: 2020-05-12 22:30 GMT
தாம்பரம், 

சென்னையை அடுத்த தாம்பரம் ரங்கநாதபுரம் 6-வது தெருவில் கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று காய்கறி ஏற்றி வந்த ஆட்டோ டிரைவருக்கு நேற்று முன்தினம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவரது குடும்பத்தினருக்கும் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

அதில் அவருடைய குடும்பத்தைச் சேர்ந்த 6 பெண்கள், 5 ஆண்கள், 2 குழந்தைகள் என 13 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது நேற்று உறுதியானது. இதையடுத்து இந்த பகுதிக்குள் வெளிநபர்கள் யாரும் செல்லாத வண்ணம் தாம்பரம் நகராட்சி அதிகாரிகள் ‘சீல்’ வைத்துள்ளனர்.

அதேபோல் கிழக்கு தாம்பரம் சர்மா தெரு பகுதியில் வசிக்கும் 45 வயது காய்கறி வியாபாரி. அவர் கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து காய்கறிகள் வாங்கி வந்து விற்பனை செய்து வந்தார். அவருடைய மனைவி, 5 வயது மகள் ஆகியோருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இவர்கள் உட்பட தாம்பரத்தில் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

பல்லாவரம்

இதேபோல் பல்லாவரம் நகராட்சியில் தனியார் தொலைக் காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்கள் உள்பட செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 35 பேர் கொரோனாவால் பாதிக் கப்பட்டு உள்ளனர். இதன் மூலம் மாவட்டம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 391 ஆக உயர்ந்தது. இவர்களில் 66 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். 4 பேர் உயிரிழந்து உள்ளனர். மற்றவர்கள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்