ஸ்ரீபெரும்புதூரில் போதைக்காக வார்னீஷ் குடித்த ஓட்டல் ஊழியர் சாவு

ஸ்ரீபெரும்புதூரில் போதைக்காக வார்னீஷ் குடித்த ஓட்டல் ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2020-05-14 22:30 GMT
ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் காந்திரோடில் உள்ள ஓட்டலில் தங்கி வேலை செய்து வந்தவர் சாமிநாதன் (வயது 45). இவர் நேற்று காலை தான் வேலை செய்த ஓட்டலுக்கு அருகே பிணமாக கிடந்தார்.

இது குறித்து தகவல் அறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் விநாயகம் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சாமிநாதனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். போலீஸ் விசாரணையில் சாமிநாதன் போதைக்காக வார்னிஷ் குடித்ததும் அதனால் இறந்ததும் தெரியவந்தது.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன. இதனால் மது பிரியர்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

ஒரு சிலர் குடியை மறக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டனர். இந்த நிலையில் சாமிநாதனும் போதைக்காக வார்னீஸ் குடித்து இறந்துள்ளார்.

மேலும் செய்திகள்