அதியமான்கோட்டை ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி

அதியமான்கோட்டை ஊராட்சியில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி.

Update: 2020-05-15 03:10 GMT
நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளியை அடுத்த அதியமான்கோட்டை ஊராட்சியில் தூய்மை பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்றத்தலைவர் மாரியம்மாள் முனிராஜ் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஷகிலா கலந்து கொண்டு, ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை வழங்கி பேசினார். இதில் முன்னாள் ஒன்றியக்குழுத்தலைவர் பூக்கடை முனுசாமி, பா.ம.க. மாவட்ட செயலாளர் பெரியசாமி, கூட்டுறவு வங்கித்தலைவர் சிவப்பிரகாஷ், அ.தி.மு.க. கிளை செயலாளர் பிரேம்குமார், ஒன்றிய கவுன்சிலர் முருகன், ஊராட்சி செயலர் திருவருட்செல்வன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்