திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரோனா - பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்வு

திருவண்ணாமலை மாவட்டத்தில் மேலும் 3 பேருக்கு கொரேர்னா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-05-21 23:45 GMT
திருவண்ணாமலை, 

சென்னை உள்ளிட்ட பிற மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு வேலைக்கு சென்றவர்கள் அங்கிருந்து திருவண்ணாமலை மாவட்டத்திற்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். அதன்படி, கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதியில் இருந்து நேற்று முன்தினம் வரை 8 ஆயிரத்து 101 பேர் வந்து உள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 570 பேர் வந்து உள்ளனர். மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 165 ஆக இருந்தது.

இந்த நிலையில் நேற்று மேலும் 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் தண்டராம்பட்டு அருகே உள்ள அயோதியாநகரத்தை சேர்ந்த 22 வயது வாலிபர், மலையனூரை சேர்ந்த 30 வயது பெண், தண்டராம்பட்டை சேர்ந்த 34 வயது வாலிபருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் 3 பேரும் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். இதனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 168 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்