நிவாரணம் வழங்கக்கோரி கலெக்டர் அலுவலகத்துக்கு பெண் வேடமணிந்து வந்த நாட்டுப்புற கலைஞர்கள்

சிவகங்கை கலெக்டர் அலுவலகத்துக்கு பெண் வேடமணிந்து வந்த நாட்டுப்புற கலைஞர்கள் நிவாரணம் வழக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு கொடுத்துள்ளனர்.

Update: 2020-05-22 06:06 GMT
சிவகங்கை, 

சிவகங்கை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்கள் சங்க மாவட்ட தலைவர் ஆல்பர்ட்ராஜா தலைமையில், நாட்டுப்புற கலைஞர்கள் வேடமணிந்து மேள தாளத்துடன் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்களில் 2 பேர் பெண் வேடமணிந்து வந்திருந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் ஜெயகாந்தனை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-

மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலைஞர்கள் வசித்து வருகிறோம். ஆண்டுதோறும் மாசி, பங்குனி மாதங்களில் நடைபெறும் திருவிழா மற்றும் பல்வேறு விஷேச காலங்களில் மட்டும் நடைபெறும் நிகழ்ச்சிகளில் நாங்கள் வேடமணிந்து பங்கேற்று அதன் மூலம் வரும் வருமானத்தை பெற்று வாழ்ந்து வந்தோம்.

வருமானம் இல்லை

தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து திருவிழாக்களும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கடந்த 3 மாதங்களாக எவ்வித வருமானமும் இன்றி வறுமையில் இருந்து வருகிறோம். எனவே வறுமையில் வாடும் எங்களுக்கு அரசு சார்பில் உரிய நிவாரணம் வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

மேலும் செய்திகள்