நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறிய 7,509 பேர் கைது
கொரோனா ஊரடங்கையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் வாகனங்களில் தேவையின்றி வெளியே சுற்றுபவர்களை கண்டறிந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர்.
நாமக்கல்,
நேற்று ஒரே நாளில் ஊரடங்கை மீறியதாக 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 5 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் இதுவரை ஊரடங்கை மீறியதாக 6,690 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 7,509 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
அவர்களிடம் இருந்து 3,784 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.