150 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி, உதவித்தொகை; ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வழங்கினார்

சேலம் மாநகர மாவட்ட அ.தி.மு.க. சார்பில் 150 ஆட்டோ டிரைவர்களுக்கு அரிசி, உதவித்தொகையை ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. வழங்கினார்

Update: 2020-05-27 04:35 GMT
சேலம்,

ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சேலம் மாநகர, மாவட்ட அ.தி.மு.க. சார்பில் ஏழை, எளிய மக்கள் உள்பட பல்வேறு தரப்பு மக்களுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் மாநகர அ.தி.மு.க. சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் உதவித்தொகை, காய்கறிகள், மளிகை தொகுப்பு, அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களையும் வழங்கி வருகிறது.

நேற்று காலை சேலம் ஜங்ஷன், பழைய சூரமங்கலம், ஏ.வி.ஆர்.ரவுண்டானா ஆகிய பகுதிகளில் உள்ள 150 ஆட்டோ டிரைவர்களுக்கு 10 கிலோ அரிசி மற்றும் உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி புது ரோடு பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஜி.வெங்கடாஜலம் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி ஆட்டோ டிரைவர்களுக்கு உதவித்தொகை, அரிசியை வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் சேர்மன் வெங்கடாஜலம், ஜனா, ராமசாமி, அன்பு, தளபதி சரவணன், செல்வம், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்