பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது

பேரிகை அருகே பணம் வைத்து சூதாடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2020-05-28 00:59 GMT
ஓசூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம், பேரிகை அருகே உள்ள மிடுதேப்பள்ளி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அங்கு பணம் வைத்து சூதாடிய முனிராஜ் (வயது26), ஸ்ரீதர் (19), மற்றொரு முனிராஜ் (25) ஆகிய 3 பேரையும் பேரிகை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.3 ஆயிரத்து 320 பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்