சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி அடித்துக்கொலை

சேந்தமங்கலத்தில் மாங்காய் வியாபாரி தடியால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பக்கத்து வீட்டை சேர்ந்த தாய், மகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்

Update: 2020-05-30 01:19 GMT
சேந்தமங்கலம்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் சிவியாரத்தெருவை சேர்ந்தவர் மொட்டையாண்டி (வயது 62), மாங்காய் வியாபாரி. இவருக்கும், பக்கத்து வீட்டை சேர்ந்த புஷ்பராணி, இவரது மகள் காயத்ரி ஆகியோருக்கும், வீட்டு முன்பு கழிவுநீர் தேங்குவது தொடர்பாக அடிக்கடி வாய்தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் நேற்று இவர்களுக்குள் நடந்த தகராறின்போது புஷ்பராணியும், காயத்ரியும் தடியால் மொட்டையாண்டியை சரமாரியாக அடித்துள்ளனர். இதில் படுகாயமடைந்த அவர் சேந்தமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் இறந்தார். இதுகுறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான புஷ்பராணி, காயத்ரி ஆகியோரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்