மராட்டியத்தில் கொரோனாவுக்கு மேலும் 103 பேர் சாவு

மராட்டியத்தில் மேலும் 103 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.

Update: 2020-06-02 23:18 GMT
மும்பை,

மராட்டியத்தில் ஆட்கொல்லி கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 2 ஆயிரத்து 287 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 72 ஆயிரத்து 300 ஆக உயர்ந்து உள்ளது.

இதேபோல மாநிலத்தில் புதிதாக 103 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதில் புனே, மிரா பயந்தரில் தலா 10 பேர் தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 2 ஆயிரத்து 465 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் 31 ஆயிரத்து 333 பேர் குணமாகி உள்ளனர்.

மும்பையை பொறுத்தவரை நேற்று புதிதாக 1,109 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதனால் நகரில் வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 42 ஆயிரத்து 216 ஆக உயர்ந்து உள்ளது. இதேபோல புதிதாக 49 பேர் பலியாகி உள்ளனர். இதுவரை மும்பையில் நோய் தொற்றுக்கு 1,398 பேர் உயிரிழந்து உள்ளனர். புனே மாநகராட்சியில் 7 ஆயிரத்து 144 பேரும் (326 பேர் பலி), நவிமும்பை மாநகராட்சியில் 2 ஆயிரத்து 887 பேரும் (71 போ் பலி) கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்