உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி கொலை வழக்கில் 7 பேர் கைது

உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி கொலை வழக்கில் 7 பேர் கைது செய்யப்பட்டனர் .

Update: 2020-06-03 03:49 GMT
உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள தாமல் கிராமத்தை சேர்ந்தவர்கள் மகாதேவன், மகேந்திரன். அண்ணன்- தம்பிகளான இவர்கள் 2 பேருக்கும் இடையே சம்பவத்தன்று சொத்து பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். அந்த சமயத்தில் அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் சண்டையை விலக்கி விட்டார்.

இந்த நிலையில் மகேந்திரன் தனது ஆதரவாளர்களான சுபாஷ், குமார், அருண், திவாகர், தேன்மொழி, கஸ்தூரி, தனம் ஆகியோருடன் சேர்ந்து முருகனிடம், நீ ஏன் மகாதேவனுக்கு ஆதரவாக செயல்படுகிறாய் என கூறி தகராறில் ஈடுபட்டார். அந்த சமயத்தில் அங்கு வந்த முருகனின் அண்ணணான தொழிலாளி சுந்தரம்(55) என்பவர், ஏன் எனது தம்பியிடம் தகராறில் ஈடுபடுகிறீர்கள் என கூறி மகேந்திரன் உள்ளிட்டவர்களை தட்டிக்கேட்டார்.

அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் அருண் உள்ளிட்டவர்கள் கத்தியால் சுந்தரத்தை குத்தி கொலை செய்தனர். இது குறித்த புகாரின் பேரில் திருநாவலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அருண் உள்ளிட்ட 8 பேரை தேடி வந்தனர். இந்த நிலையில் அருண், மகேந்திரன், சுபாஷ், குமார், திவாகர், கஸ்தூரி, தனம் ஆகிய 7 பேரை கைது செய்தனர். மேலும் தேன்மொழியை தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்