பிரபல ரவுடி குண்டர் சட்டத்தில் கைது

புதுவை முத்தியால்பேட்டை அன்பு ரஜினி உள்பட பல்வேறு கொலை வழக்கில் தொடர்புடையவர் பிரபல ரவுடி சோழன்.

Update: 2020-06-03 22:58 GMT
புதுச்சேரி,

ரவுடி சோழன் மீது பல்வேறு அடிதடி வழக்குகள் உள்ளன. தற்போது அவர் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் சோழனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய லாஸ்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்திருந்தார்.

இதற்கிடையே அன்பு ரஜினி கொலை வழக்கில் ஜாமீன் கேட்டு சோழன் புதுச்சேரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு நீதிமன்றம் நேற்று ஜாமீன் வழங்கியது. இந்த நிலையில் சோழனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அருண் உத்தரவிட்டார். உடனே லாஸ்பேட்டை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சோழனை கைது செய்து காலாப்பட்டு சிறையில் மீண்டும் அடைத்தனர்.

மேலும் செய்திகள்