கொரோனா தொற்று ஏற்பட்ட 80 சதவீதம் பேருக்கு அறிகுறி தெரிகிறது- சுகாதாரத்துறை அதிகாரி தகவல்

கொரோனா தொற்று ஏற்பட்ட 80 சதவீதம் பேருக்கு அதற்கான அறிகுறி தெரிகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரி பழனி தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-28 00:24 GMT
காஞ்சீபுரம்,

கொரோனா தொற்று ஏற்பட்ட 80 சதவீதம் பேருக்கு அதற்கான அறிகுறி தெரிகிறது என்று சுகாதாரத்துறை அதிகாரி பழனி தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு பலருக்கு அறிகுறிகள் இல்லாமல் பரவியது. இதனால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிவதில் சுகாதாரத்துறையினருக்கு சிரமம் ஏற்பட்டது. பலருக்கு அறிகுறி தெரியாததால் மேலும் பலருக்கு தொற்று பரவ காரணமானது. இது குறித்து காஞ்சீபுரம் மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் வி.கே பழனி கூறியதாவது:- கடந்த சில வாரங்களாகவே கொரோனா தொற்று பரவும் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்த தொற்று ஏற்பட்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு சளி, இருமல், தொண்டைவலி, காய்ச்சல், சுவையின்மை, மூச்சுத்திணறல் உள்ளிட்ட அறிகுறிகள் தெரிய தொடங்கியுள்ளன. இவற்றில் ஏதேனும் 2 அறிகுறிகள் தென்பட்டாலேயே அவர்களை தனிமைப்படுத்தி சொதனை செய்யப்படுகிறது. அறிகுறி தெரிவதால் அவர்களை அடையாளம் கண்டு தனிமைப்படுத்துவது எளிதாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்