ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள்-லாரி மோதல்; 2 பேர் பலி

ஸ்ரீபெரும்புதூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் பலியானார்கள்.

Update: 2020-07-08 23:10 GMT
ஸ்ரீபெரும்புதூர்,

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த மாகாணம் அங்காள பரமேஸ்வரி தெருவை சேர்ந்தவர் காவேரி. இவரது மகன் சங்கர் (வயது 24). ஸ்ரீபெரும்புதூரை அடுத்த சிவன்தாங்கல் பகுதியை சேர்ந்தவர் சின்னதம்பி (22).

இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் மோட்டார் சைக்கிளில் தாம்பரம்ஸ்ரீபெரும்புதூர் சாலையில் சென்று கொண்டிருந்தனர். அப்போது ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தாம்பரம் நோக்கி சென்ற லாரி, மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சங்கர் மற்றும் சின்னதம்பி இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சின்னதம்பி பரிதாபமாக இறந்தார்.

சங்கர் மேல்சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்