நாகூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியல் 32 பேர் கைது

நாகூரில் சாலை மறியலில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 32 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-07-21 00:55 GMT
நாகூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி நாகை சட்டமன்ற தொகுதி செயலாளர் அறிவழகனுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும், ஆதிதிராவிடர்களுக்கு சொந்தமான இடங்களை ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிக்கும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்ககோரியும் நாகூர் புதிய பஸ் நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்திற்கு நாகூர் நகர செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். நகர துணை செயலாளர் பாலாஜி, நகர தொண்டர் அணி அமைப்பாளர் நாகராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 32 பேர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

32 பேர் கைது

இதுகுறித்து தகவல் அறிந்த நாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்படாததால் 32 பேரையும் கைது செய்து அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்து மாலையில் விடுவித்தனர். இதையடுத்து 32 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்