திருவாரூர் மாவட்டத்தில் ஒரேநாளில் 112 பேருக்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,661 ஆக உயர்வு

திருவாரூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,661 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-30 05:55 GMT
திருவாரூர்,

திருவாரூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை 1,549 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர்். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக தொற்றினால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 100-ஐ கடந்து சென்று கொண்டிருக்கிறது. அதன்படி நேற்று ஒரே நாளில் 112 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,661 பேர் ஆக உயர்ந்துள்ளது.

இதில் திருவாரூர் பகுதியை சேர்ந்த போலீஸ்காரர் ஒருவர் உள்பட 4 பேர், வலங்கைமான் பகுதியை சேர்ந்த ஒரு வயது குழந்தை உள்பட 6 பேர், குடவாசல், நன்னிலம் பகுதியை சேர்ந்த தலா 3 பேர், நீ்டாமங்கலம் பகுதியை சேர்ந்த 7 பேர், மன்னார்குடி பகுதியை சேர்ந்த 2 பேர் என மாவட்டம் முழுவதும் 112 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதிதாக வலங்கைமான் அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்