வேலூர் பழைய பஸ்நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம்

வேலூர் மாநகராட்சி சார்பில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடந்தது.

Update: 2020-07-31 16:44 GMT
வேலூர்,

வேலூர் மாநகராட்சி சார்பில் வேலூர் பழைய பஸ் நிலையத்தில் கொரோனா பரிசோதனை முகாம் நேற்று நடந்தது. முகாமில் நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், நர்சுகள் பங்கேற்று கொரோனா பரிசோதனை செய்தனர். இதில், 100-க்கும் மேற்பட்ட நபர்கள் பங்கேற்றனர். அதில், சளி, இருமல் உள்ளிட்ட அறிகுறி காணப்பட்ட 55 பேரின் சளி மாதிரி சேகரிக்கப்பட்டன என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்த முகாமை 2-வது மண்டல சுகாதார அலுவலர் சிவக்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் மேற்பார்வையிட்டனர்.

மேலும் செய்திகள்