மும்பையில் புதிதாக 1,105 பேருக்கு கொரோனா 49 பேர் பலி

மும்பையில் புதிதாக 1,105 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.49 பேர் உயிரிழந்தனர்.

Update: 2020-08-02 22:04 GMT
மும்பை,

தலைநகர் மும்பையில் கொரோனா பரவல் வேகம் ஓரளவு கட்டுபடுத்தப்பட்டுள்ளது.  இதில் நேற்று நகரில் புதிதாக 1,105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 16 ஆயிரத்து 436 ஆக அதிகரித்து உள்ளது.

இதில் 88 ஆயிரத்து 299 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 21 ஆயிரத்து 394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல நகரில் மேலும் 49 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியாகி உள்ளனர். இதில் 31 பேர் ஆண்கள். 18 பேர் பெண்கள். இதனால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 6 ஆயிரத்து 447 ஆகி உள்ளது.

மும்பையில் குணமானவர்கள் சதவீதம் 76 ஆக உள்ளது. நோய் பரவல் இரட்டிப்பு காலம் 78 நாட்களாக உள்ளது.

மேலும் செய்திகள்