கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஒரே நாளில் 49 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-08-08 03:46 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். காவேரிப்பட்டணத்தில் 6 ஆண்கள், 1 பெண், கிருஷ்ணகிரியில் 6 ஆண்கள், 1 பெண், ஓசூரில் 13 ஆண்கள், 8 பெண்கள், பர்கூரில் 2 ஆண்கள், 1 பெண், ஒப்பதவாடியில் 1 ஆண், 1 பெண், குப்பச்சிப்பாறை, சின்னமேலுப்பள்ளி, அஞ்செட்டி, தேன்கனிக்கோட்டை, வேப்பனப்பள்ளி, மதிகோன்பாளையம் ஆகிய பகுதிகளில் தலா 1 ஆண்களும், கெலமங்கலத்தில் 1 பெண் என நேற்று மொத்தம், 49 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,320 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்