திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று 17 ஆயிரத்தை தாண்டியது ஒரே நாளில் 396 பேர் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 396 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியது.

Update: 2020-08-10 00:42 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 25 பேர், கடம்பத்தூர் ஒன்றியத்தில் 33 பேர் உள்பட திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 396 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டம் முழுவதும் இதுவரை 17ஆயிரத்து 13 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர் களில் 13 ஆயிரத்து 214 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 3,513 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று 6 பேர் பலியானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 286 ஆனது.

வண்டலூர்

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட ஊனைமாஞ்சேரி ஊராட்சியில் உள்ள சோழன் தெருவில் வசிக்கும் 12 பேர், பெருமாள்கோவில் தெருவை சேர்ந்த 63 வயது மூதாட்டி, 52 வயது பெண், இந்திராகாந்தி தெருவை சேர்ந்த 21 வயது இளம்பெண் உள்பட 29 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 2 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 397 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 811 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 14 ஆயிரத்து 776 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று ஒரே நாளில் 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 307 ஆக உயர்ந்தது. 2,728 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சி பகுதியை சேர்ந்த 27, 23 வயதுடைய வாலிபர்கள், மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 68 வயது மூதாட்டி, சோமங்கலம் பகுதியை சேர்ந்த 64 வயது முதியவர், ஒரகடம் பகுதியை சேர்ந்த 24, 22 வயது வாலிபர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 393 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆயிரத்து 807 ஆக உயர்ந்து உள்ளது. இவர்களில் 8 ஆயிரத்து 938 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று ஒரே நாளில் 5 பேர் பலியானதால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 151 ஆக உயர்ந்தது. 2,718 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்