பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரியில் நாளை மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு

பெசன்ட் நகர், அடையாறு, வேளச்சேரியில் நாளை மின்தடை செய்யப்படுவதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2020-09-03 02:41 GMT
சென்னை, 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் மின் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும். அதன்படி, பெசன்ட் நகர் 1 மற்றும் 3-வது வார்டு சாலை, பாலகிருஷ்ணா சாலை, ராஜா சீனிவாச நகர் பிரதான சாலை, ராஜகோபாலன் பிரதான சாலை, ஆசிரியர் காலனி 1 முதல் 4-வது தெருக்கள்.

வேளச்சேரி (மேற்கு)- வேளச்சேரி தாம்பரம் பிரதான சாலை (ஒரு பகுதி), விஜயா நகர், ராம் நகர், முருகு நகர், பத்மாவதி நகர், சங்கரன் நகர், கோமதி நகர். அடையாறு-கிரசென்ட் அவென்யூ காந்தி நகர், 1, 2, 3-வது கிரசென்ட் பார்க் சாலை காந்தி நகர், 4-வது மெயின் ரோடு காந்தி நகர். இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்