கரூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று

கரூர் மாவட்டத்தில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-09-21 01:07 GMT
கரூர்,

கரூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. கொரோனாவின் பிடியில் இருந்து தப்பிக்க பொதுமக்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் வருகின்றனர். ஆனால் கொரோனாவினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தினமும் அதிகரிக்கத்தான் செய்கிறது. இந்நிலையில் நேற்று சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள பட்டியலில் மேலும் 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி அம்மன்நகரை சேர்ந்த 36 வயது ஆண், காந்திகிராமத்தை சேர்ந்த 45 வயது ஆண், 37 வயது ஆண், 40 வயது ஆண், 26 வயது வாலிபர், 39 வயது பெண், காமராஜபுரத்தை சேர்ந்த 52 வயது ஆண், தாந்தோன்றிமலையை சேர்ந்த 25 வயது வாலிபர், 59 வயது ஆண், 41 வயது பெண்.

வேலாயுதம்பாளையம்

பிள்ளைபுதூரை சேர்ந்த 63 வயது முதியவர், கட்டளையை சேர்ந்த 66 வயது முதியவர், வேலாயுதம்பாளையத்தை சேர்ந்த 46 வயது பெண், ஜெகதாபியை சேர்ந்த 74 வயது முதியவர், 74 வயது மூதாட்டி, புலியூரை சேர்ந்த 43 வயது ஆண், குளித்தலையை சேர்ந்த 82 வயது முதியவர், வாங்கப்பாளையத்தை சேர்ந்த 44 வயது ஆண், வெங்கமேட்டை சேர்ந்த 42 வயது ஆண், அண்ணாசிட்டியை சேர்ந்த 30 வயது ஆண், அரவக்குறிச்சியை சேர்ந்த 65 வயது முதியவர் உள்பட 40 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் கரூர் காந்தி கிராமத்தில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்