நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை தமிழ்ப்புலிகள் கட்சியினர் முற்றுகை

தமிழ்ப்புலிகள் கட்சியினர் நேற்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-09-23 03:25 GMT
நெல்லை,

தமிழ்ப்புலிகள் கட்சியினர் நேற்று நெல்லை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமை தாங்கினார். குயிலி பேரவை மாவட்ட செயலாளர் மாடத்தி ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். கொரோனா ஊரடங்கு காலத்தில் வேலையிழந்த 9 ஒப்பந்த தூய்மை பணியாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. அப்போது மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதைத்தொடர்ந்து அவர்கள் மாநகராட்சி ஆணையாளரை சந்தித்து மனு அளித்தனர். இதையொட்டி அங்கு நெல்லை மாநகர உதவி போலீஸ் கமிஷனர் சதீஷ்குமார், இன்ஸ்பெக்டர் ரேனியஸ் ஜேசுபாதம் ஆகியோர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதைத்தொடர்ந்து தமிழ்ப்புலிகள் கட்சியினர் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு சென்று மாவட்ட செயலாளர் தமிழரசு தலைமையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை திருத்த மசோதாவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மேலும் செய்திகள்