மும்பையில் புதிதாக 2,654 பேருக்கு கொரோனா 46 பேர் பலி

மும்பையில் புதிதாக 2 ஆயிரத்து 654 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 46 பேர் உயிரிழந்து உள்ளனர்.

Update: 2020-09-30 21:13 GMT
மும்பை,

மராட்டியத்தில் நேற்று புதிதாக 18 ஆயிரத்து 317 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13 லட்சத்து 84 ஆயிரத்து 446 ஆக உயர்ந்தது.

இதேபோல மேலும் 481 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்தனர். இதனால் பலியானோர் எண்ணிக்கை 36 ஆயிரத்து 662 ஆக அதிகரித்தது.

ஆறுதல் தரும் செய்தியாக ஒரே நாளில் 19 ஆயிரத்து 163 பேர் தொற்று நோயில் இருந்து மீண்டனர். இதன் மூலம் மாநிலத்தில் இதுவரை 10 லட்சத்து 88 ஆயிரத்து 322 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 2 லட்சத்து 59 ஆயிரத்து 33 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மும்பை

தலைநகர் மும்பையில் நேற்று புதிதாக 2 ஆயிரத்து 654 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் இங்கு பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்து 5 ஆயிரத்து 268 ஆக உயர்ந்தது. மேலும் 46 பேர் பலியானதால், இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்து 929 ஆக அதிகரித்தது.

மாநிலம் முழுவதும் இதுவரை 67 லட்சத்து 85 ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்