செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று 37 ஆயிரத்தை தாண்டியது

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 381 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 37 ஆயிரத்தை தாண்டியது.

Update: 2020-10-05 00:31 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 37 பேர், மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 10 பேர் உள்பட நேற்று 381 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 150 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 33 ஆயிரத்து 980 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர்.

நேற்று சிகிச்சை பலனின்றி ஒரே நாளில் 6 பேர் உயிரிழந்ததையடுத்து, மாவட்டத்தில் பலியானோரின் எண்ணிக்கை 571 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 599 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் செய்திகள்