செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 283 பேர் பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 283 பேர் பாதிப்புக்குள்ளானார்கள்.

Update: 2020-10-06 23:02 GMT
வண்டலூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் 8 பேர், நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட கிராம பகுதியில் 26 பேர், ஒத்திவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4 பேர் உள்பட நேற்று 283 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 757 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 34 ஆயிரத்து 552 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று சிகிச்சை பலனின்றி 2 பேர் உயிரிழந்தனர். இதனால் செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 576 ஆக உயர்ந்தது. 2 ஆயிரத்து 629 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

திருவள்ளூர்

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்று 263 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். இதுவரை மாவட்டம் முழுவதும் 33 ஆயிரத்து 746 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 31 ஆயிரத்து 430 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 1,749 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம் முழுவதும் இதுவரையில் 567 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் மாவட்டம் முழுவதும் 6 பேர் இறந்துள்ளார்.

படப்பை

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பையை அடுத்த மாடம்பாக்கம் பகுதியை சேர்ந்த 48 வயதுடைய ஆண் நபருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனைத்தொடர்ந்து அவரை சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று 156 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர்.

இதுவரை மாவட்டம் முழுவதும் 22 ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 21 ஆயிரத்து 629 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். 886 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை 336 பேர் கொரோனா தொற்றால் இறந்துள்ளனர். மாவட்டம் முழுவதும் நேற்று 7 பேர் இறந்தனர்.

மேலும் செய்திகள்