மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் நியமனம்
மாநில மகிளா காங்கிரஸ் தலைவர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி மாநிலத்தின் மகிளா காங்கிரஸ் தலைவராக இருந்து வந்த பிரேமலதா உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்ததைத் தொடர்ந்து அவர் வகித்து வந்த பதவி காலியாக இருந்தது.
இந்த நிலையில் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் உத்தரவின் பேரில் புதுச்சேரி மாநில மகிளா காங்கிரஸ் தலைவராக பிரேம் பஞ்சகாந்தி நியமிக்கப்பட்டார். இதற்கு முன் இவர் மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளராக இருந்து வந்தார். இத்தகவலை கட்சியின் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.