நெமிலி அருகே, தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை - சாவில் சந்தேகம் இருப்பதாக புகார்

நெமிலி அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். சாவில் சந்தேகம் இருப்பதாக தந்தை அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Update: 2020-10-13 14:30 GMT
நெமிலி,

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த சம்பத்ராயன்பேட்டையை சேர்ந்தவர் சிவசங்கர். இவருடைய மனைவி பூர்ணிமா (வயது 30). திருமணமாகி இரண்டு ஆண்டுகளாகிறது. இவர்களுக்கு ஒரு வயதில் திருமுருகன் என்ற ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு சில தினங்களுக்கு முன்புதான் பிறந்தநாள் கொண்டாடியுள்ளனர். கடந்த சில தினங்களாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு பூர்ணிமா சம்பத்ராயன்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அவருடைய சாவில் சந்தேகம் உள்ளதாக பூர்ணிமாவின் தந்தை சம்மந்தன் கொடுத்த புகாரின்பேரில் நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்