ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா

ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டத்தில் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

Update: 2020-10-18 15:00 GMT
ராணிப்பேட்டை, 

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்து 303 ஆக உயர்ந்துள்ளது. இதில் மொத்தம் 349 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதேபோல திருப்பத்தூர் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 32 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,057ஆக உயர்ந்துள்ளது. மேலும் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

மேலும் செய்திகள்