தாம்பரம், கிண்டி , நொளம்பூர், மற்றும் பட்டாபிராமில் 20-ந் தேதி மின்தடை - மின்சார வாரியம் அறிவிப்பு

தாம்பரம், கிண்டி , நொளம்பூர், மற்றும் பட்டாபிராமில் 20-ந் தேதி மின் வினியோகம் நிறுத்தப்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

Update: 2020-10-18 17:22 GMT
சென்னை, 

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னையில் மின் பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட இடங்களில் வருகிற 20-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும்.

நொளம்பூர்: ஜஸ்வர்யா நகர், வானகரம் பிரதான சாலை, கேலக்ஸி சாலை, சடையப்பா வள்ளல் தெரு, கீசன் ஹவுஸிங் காலனி, எஸ்-பி பவுண்டேஷன், நொளம்பூர் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, எஸ்.ஆர்.ஆர் நகர்.

தாம்பரம் (முடிச்சூர்): பாலாஜி நகர், சாமி நகர், முல்லை நகர், நவாபபிபுல்லா நகர் மற்றும் புருஷோத்தமன் நகர், லட்சுமி நகர், கோம்மையம்மன் நகர், நேதாஜி நகர், பெரியார் சாலை, சரவணபவா நகர், கட்டபொம்மன் தெரு, ஸ்ரீராம் நகர், எஸ்.கே.அவென்யூ, பார்வதி நகர், சக்தி நகர், ராயப்பா நகர், விஜய் நகர், சிங்காரவேலன் நகர், அஷ்டலட்சுமி நகர், திருமுடிவாக்கம்.

கிண்டி: ராமர் கோவில் தெரு, மவுண்ட் பூந்தமல்லி சாலை (ஒரு பகுதி), வசந்தம் நகர், கலைஞர் நகர், தண்டுமா நகர், மீனம்பாக்கம் (ஒரு பகுதி), திருவள்ளுவர் நகர், குமரன் நகர், ராணுவ காலனி, இந்திரா நகர், மத்தியாஸ் நகர் மற்றும் அதன் அருகில் உள்ள பகுதிகள்.

பட்டாபிராம்: பாரதியார் நகர், கக்கன்ஜி நகர், திருவள்ளுவர் நகர், தீனதயாளன் நகர், நவஜீவன் நகர், சத்திரம் பள்ளிக்கூட தெரு, தேவராஜபுரம், காந்தி நகர், பி.ஜி அடுக்குமாடி குடியிருப்பு

மேல்பாக்கம்: அய்யப்பா நகர், வி.ஜி.வி நகர், தனலட்சுமி நகர், சீனிவாச நகர், கண்ணம்பாளையம், மேல்பாக்கம், மேல்பாக்கம் வி.ஜி.என், அருணாச்சலம் நகர், என்.எஸ்.ஆர். நகர்.

பராமரிப்பு பணி முடிவடைந்ததும் மீண்டும் மின் வினியோகம் கொடுக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்