அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் மீது வழக்கு

அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கூட்டு குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-11-01 00:20 GMT
அறந்தாங்கி, 

அறந்தாங்கி அரசு போக்குவரத்து பணிமனை முன்பு நேற்று தி.மு.க. தொழிலாளர் முன்னேற்ற சங்கம் மற்றும் கூட்டு குழுவின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிளை செயலாளர் யோகராஜ் தலைமை தாங்கினர். ஆர்ப்பாட்டத்தில் 14-வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். தீபாவளி முன்பணம், போனஸ் உடனே வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இந்தநிலையில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக யோகராஜ் (50) உள்பட 5 பேர் மீது அறந்தாங்கி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்