திருமணமாகாத விரக்தியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகள் தூக்குப்போட்டு தற்கொலை

திருமணமாகாத விரக்தியில் ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டரின் மகள் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது.

Update: 2020-11-09 04:24 GMT
கே.கே.நகர்,

திருச்சி கே.கே.நகர் அருகே உள்ள கவிபாரதி நகர் 4-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அமிர்தலிங்கம். ஓய்வு பெற்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர். இவரது மகள் அஞ்சலிதேவி (வயது 32). எம்.சி.ஏ., எம்.பில். படித்து உள்ளார்.

இவர் வேலைக்கு எதுவும் செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். அவருக்கு 32 வயதாகியும் திருமணம் நடைபெறவில்லை. இதனால் கடந்த சில நாட்களாக அஞ்சலிதேவி மனமுடைந்து காணப்பட்டார்.

இந்தநிலையில் திருமணமாகாத விரக்தியில் இருந்த அஞ்சலிதேவி நேற்று மதியம் வீட்டின் முதல் மாடியில் மின்விசிறி கொக்கியில் சேலை மூலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி தகவல் அறிந்த கே.கே.நகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள்.

பின்னர் அஞ்சலி தேவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் கே.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்