மகன் தரக்குறைவாக பேசியதால் பெற்றோர் தற்கொலை

மகன் தரக்குறைவாக பேசியதால் பெற்றோர் தற்கொலை செய்து கொண்டனர்.

Update: 2020-11-22 21:45 GMT
சோழிங்கநல்லூர்,

சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை 2-வது தெருவை சேர்ந்தவர் கோதண்டன் (வயது 70). இவரது மனைவி ஜெயலட்சுமி (60). இவரது மகன் கிருபாகரன் (38). இவருக்கு திருமணமாகி தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். கிருபாகரன் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தனது தாய், தந்தையுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இதேபோல் தனது தாய், தந்தையை தரக்குறைவாக பேசி விட்டு அங்கிருந்து சென்று விட்டார்.

நேற்று காலை கோதண்டனின் வீட்டுக்கு அவரது தம்பி ஆறுமுகம் வந்தார். கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. நீண்ட நேரமாகியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அவர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது தனது அண்ணன் கோதண்டன் மற்றும் அண்ணி ஜெயலட்சுமி ஆகியோர் வாயில் நுரை தள்ளியபடி இறந்து கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இருவரது உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீஸ் விசாரணையில் மகன் தரக்குறைவாக பேசியதால் மனம் உடைந்து இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இது குறித்த புகாரின்பேரில் செம்மஞ்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்