3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை

சூளகிரி அருகே 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபருக்கு 6 ஆண்டு சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2020-12-01 04:36 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா கோனேரிப்பள்ளி அருகே உள்ளது குண்டுகுறுக்கி. இந்த ஊரைச் சேர்ந்தவர் திம்மராஜ் (வயது 20). இவர் அந்த பகுதியை சேர்ந்த 3 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார். இந்த சம்பவம் கடந்த 23.02.2019 அன்று நடந்தது. இது தொடர்பாக சிறுமியின் பெற்றோர் ஓசூர் டவுன் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகலா வழக்குப்பதிவு செய்து திம்மராஜை கைது செய்தார். அவர் மீது போக்சோ சட்டம் மற்றும் பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு கிருஷ்ணகிரி மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது.

சிறை தண்டனை

வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பு கூறினார். அதன்படி, குற்றம் சாட்டப்பட்ட திம்மராஜிக்கு, 6 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2,500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் கலையரசி ஆஜர் ஆகி வாதாடினார்.

மேலும் செய்திகள்