பெரம்பலூரில் லாரி மீது மொபட் மோதல்; ரெயில்வே ஊழியர் பலி

பெரம்பலூரில் லாரி மீது மொபட் மோதியதில் ரெயில்வே ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2020-12-13 23:18 GMT
ெரம்பலூர், 

பெரம்பலூர்-எளம்பலூர் ரோடு நேரு நகரை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் விஜயன் (வயது 32). இவர் அரியலூர் மாவட்டம் ஒட்டகோவில் ரெயில் நிலையத்தில், ரெயில்வே ஊழியராக வேலை பார்த்து வந்தார். விஜயன் நேற்று காலை பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உடற்பயிற்சி மேற்கொண்டார்.

பின்னர் வீட்டிற்கு தனது மொபட்டில் திரும்பி சென்று கொண்டிருந்தார். கலெக்டர் அலுவலக சாலையில் பாலக்கரை நோக்கி சென்றபோது, முன்னால் சென்ற லாரி திடீரென்று வளைவில் திரும்பியது. அப்போது எதிர்பாராதவிதமாக விஜயன் ஓட்டி வந்த மொபட் லாரியின் இடது பக்க பின்புற சக்கரத்தில் மோதியது.

சாவு

இதில் மொபட்டில் இருந்து கீழே விழுந்து படுகாயமடைந்த விஜயன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்து அங்கு வந்த பெரம்பலூர் போலீசார், விஜயனின் உடலை ைகப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்