மணல் கடத்தலில் ஈடுபட்டவர் உள்பட 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது

தஞ்சை மாவட்டத்தில் மணல் கடத்தலில் ஈடுபட்டவர் உள்பட 2 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Update: 2020-12-20 02:45 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டம் பாபநாசத்தை அடுத்த பள்ளியூர் தோப்பு தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன் குட்டி என்ற சிதம்பரம் (வயது50). இவர் தற்போது தஞ்சை ஞானம் நகர் 12-வது தெருவில் வசித்து வருகிறார். மணல் கடத்தல் தொடர்பாக இவர் மீது வழக்கு உள்ளது.

இதே போல் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை ஆர்.வி. நகரை சேர்ந்தவர் கணேசன். இவருடைய மகன் சிவா (24). இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்ய தஞ்சை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தே‌‌ஷ்முக்சேகர் சஞ்சய் கலெக்டர் கோவிந்தராவுக்கு பரிந்துரை செய்தார்.

குண்டர் சட்டத்தில் கைது

இதையடுத்து கலெக்டர் உத்தரவின் பேரில் அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன், அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் குண்டர் சட்டத்தில் குட்டி என்ற சிதம்பரம், சிவா ஆகிய 2 பேரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்