மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தென்காசி ெரயில் நிலையம் முன்பு நேற்று மாலை காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2020-12-28 03:47 GMT
தென்காசி,

மத்திய அரசின் வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி தென்காசி ெரயில் நிலையம் முன்பு நேற்று மாலை காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ரெசவு முகம்மது தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர்கள் சாகுல் ஹமீது பாதுஷா, ராம்மோகன், எஸ்.டி.பி.ஐ. மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி, கம்யூனிஸ்டு கட்சி தாலுகா செயலாளர் அயூப்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் சுமார் அரை மணி நேரம் நடைபெற்றது.

மேலும் செய்திகள்