சூளைமேடு துணிக்கடையில் தீ விபத்து

சூளைமேடு நீலகண்டன் தெருவை சேர்ந்தவர் பெட்ரம் ஸ்வாரிஷ் (வயது53). இவர் சவுராஷ்டிரா நகர் 1-வது தெருவில் துணிக்கடை ஒன்று நடத்தி வருகிறார்.

Update: 2021-01-05 01:02 GMT
இந்தநிலையில் நேற்றுமுன்தினம் இரவு வழக்கம் போல் கடையைபூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று காலை அவரது கடையின் உள்ளே தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதாக, அப்பகுதியில் உள்ளவர்கள் பெட்ரம் ஸ்வாரிசுக்கு தகவல் கொடுத்தனர். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர், கடைக்கு சென்றார். கடையை திறக்க முயன்றார். ஆனால் திறக்க முடியவில்லை.

இதையடுத்து அவர் போலீசாருக்கும், தீயணைப்பு துறைக் கும் தகவல் கொடுத்தார். விரைந்து வந்த எழும்பூர் மற்றும் நுங்கம்பாக்கம் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். 

மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த சூளைமேடு போலீசார், தீ விபத்து நடந்ததற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்