கடலூரில் மழைநீர் கால்வாய்க்குள் கவிழ்ந்த லாரி கார் சேதம்

கடலூர் கண்ணாரப்பேட்டையில் இருந்து செம்மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வண்ணாரப்பாளையம் நோக்கி புறப்பட்டு சென்றது.

Update: 2021-01-11 05:39 GMT
கடலூர்,

கடலூர் கண்ணாரப்பேட்டையில் இருந்து செம்மண் ஏற்றிக்கொண்டு டிப்பர் லாரி ஒன்று வண்ணாரப்பாளையம் நோக்கி புறப்பட்டு சென்றது. அந்த லாரி சில்வர் பீச் ரோடு கடலூர் சரவணபவ கூட்டுறவு அங்காடி அருகே வந்த போது, அதன் டிரைவர் சாலையோரம் லாரியை நிறுத்தினார். அப்போது சாலையோரம் இருந்த கால்வாயில் போடப்பட்ட சிமெண்டு சிலாப் உடைந்து விழுந்தது. இதில் லாரி ஒரு புறம் கவிழ்ந்தது. அப்போது அதன் அருகில் நின்ற காரின் மீது டிப்பர் சாய்ந்து விழுந்தது. இதனால் காரின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது. இருப்பினும் டிரைவர் காயமின்றி உயிர் தப்பினார். இதுபற்றி கடலூர் புதுநகர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இருப்பினும் இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்