நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் 19 பேருக்கு கொரோனா

நெல்லை மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

Update: 2021-01-13 05:25 GMT
தென்காசி,

நெல்லை மாவட்டத்தில் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர்கள் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்றுடன் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 ஆயிரத்து 425 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 15 ஆயிரத்து 119 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். இதில் நேற்று மட்டும் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். 94 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 212 பேர் இறந்துள்ளனர்.

தென்காசி மாவட்டத்தில் புதிதாக 3 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இதுவரை 8 ஆயிரத்து 328 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 8 ஆயிரத்து 128 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பி உள்ளனர். 42 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 158 பேர் இறந்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 16 ஆயிரத்து 180 ஆக அதிகரித்து உள்ளது. இதில் 15 ஆயிரத்து 966 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 73 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 141 பேர் இறந்து உள்ளனர்.

மேலும் செய்திகள்