பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் கேட்டு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவெறும்பூர் அருகே உள்ள தேனீர்பட்டி பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-01-17 01:50 GMT
திருவெறும்பூர், 

திருவெறும்பூர் அருகே உள்ள தேனீர்பட்டி பகுதியில் சுமார் 500 ஏக்கருக்கும் மேல் சம்பா ஒரு போக நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தற்போது, அவை அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில், கடந்த ஒரு வாரமாக பெய்த மழையால் நெற்பயிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தன. மேலும் கதிர்களில் இருந்த நெல்மணிகள் முளைவிட தொடங்கின. இதனால் விவசாயிகள் பெரும் கவலை அடைந்துள்ளனர். இந்த நிலையில், இதுபற்றி அரசு அதிகாரிகளிடம் தெரிவித்தும் முறையாக வந்து விசாரித்து நிவாரணம் பெற்றுத்தருவதற்கு உரிய கணக்கை எடுக்கவில்லை என்று கூறி அப்பகுதி விவசாயிகள் நெப்போலியன் தலைமையில் வயலில் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்